2023/09/14

பெண்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று 10 பைசா வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று 10 பைசா வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பிறந்த நாள்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி (அதாவது நாளை-வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் இருக்குமோ? என்ற பதட்டம் பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் விண்ணப்பித்த பலருக்கு வங்கிக் கணக்கில் 10 பைசா வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலரின் வங்கிக் கணக்கில் ரூ. 1-ம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக