2023/09/28

தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு, பணியிடங்கள் நிரப்பப்படுவதில் சில முன்னுரிமை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதாவது, குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், 1 முதல் 12ம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்  கொரோனா காலத்தில் தனது பெற்றோர்களையும் இழந்த இளைஞர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50000 நபர்கள் அரசு பணிக்கு தேர்வாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக